உன் முகம்
எனக்கு பின்னால் தான் உன் இருக்கை
ஆனால் உன் முகம் எப்போதும் என் மனக்கண்ணில் !
என் எண்ணங்களுக்கும் உனக்கும் சம்பந்தமில்லை.
அவை எள்ளளவும் உன்னை தீண்டிவிடக்கூடாது என்னும் எச்சரிக்கையுடன்,
எப்போதும் உன் முகம் பார்க்காமல் கடக்கிறேன், உன்னுடைய
கண்ணியத்தை கொங்சம் திருடியபடி!!
உன்முக பாவணைகள் அனைத்தும் எனக்குப் பரிச்சயம்.
சிரிக்கும்போது ஒரு முகம்.
சிந்திக்கும் போது ஒரு முகம்.
பேசும்போது ஒரு முகம்.
நடக்கும் போது ஒரு முகம்.
இதோ எழுத்தில் வடித்து விட்டு கடந்து விட்டேன் உன் முகங்களை !!!