Aug 7, 2015

இந்தியாவின் இதயம் ஓய்ந்தது.

     இளைய தலைமுறையை ஊக்குவித்தது இந்தியாவை முன்னேற்றப் பாடுபட்ட இதயம் ஓய்ந்தது. 

     நாட்டையும் மக்களையும் நேசித்து சகாப்தமாகிப் போன மாமனிதரருக்கு அஞ்சலி செலுத்த மனமின்றி அழுது நிற்கிறொம்.






அன்பையும் அறிவையும் போதித்த மாமேதையை நம் அகங்களில் விதைத்திருக்கிறோம்.

ஐயா
உமது கருத்துக்கள் எங்கள் கனவுகளில் துளிர்த்து, எண்ணங்களில் வளர்ந்து, செயல்களாக விரிந்து உம் பெயர் சொல்லும், உலக அரங்கில்.
அணுஆயுதம் செய்தாலும், அகிம்சையை விரும்பி, அறிவையே பலம் என்று போதித்ததால் அழியாப்புகழ் பெற்றீர்.
வீரத்தின் மறுவடிவம் அகிம்சை என்றுணர்த்தியதால், இன்று அகிலமே உம்மை வணங்குகிறது.
பூமித்தாய் புனிதமடைந்திருக்கிறாள் உம் பூதஉடலைப் பெற்றுக் கொண்டு.

வாழ்க நின்புகழ், வளர்க நம் தாய்த் திருநாடு.