பார்வை
நீ யார் என்பதை உணர்தேன்
உன் ஓரப் பார்வை என்
உயிர் தொட்ட போது
இதயம்
ஒற்றை மயிலிறகை ஊரெல்லாம் தேடியவள்
இதயம் தொலைந்தும் தேடாமல் இருக்கிறேன்
மழை
நீ வரும்போது மட்டுமே மழை வருகிறது
நான் யாரை வரவேற்பது !
ஒவ்வொரு துளியிலும் உன்
வைரப் புன்னகை
ஜன்னலோர சாரல்களின் குறும்பு உன்
கைவிரலை மிஞ்சுகிறது
எதிர்பாராத நேரத்தில் பயமுறுத்த எப்போது
கற்றுகொடுத்தாய் இந்த இடி மின்னல்களுக்கு