Apr 2, 2010

காதல்


பார்வை

நீ யார் என்பதை உணர்தேன்
உன் ஓரப் பார்வை என்
உயிர் தொட்ட போது

இதயம்

ஒற்றை மயிலிறகை ஊரெல்லாம் தேடியவள்
இதயம் தொலைந்தும் தேடாமல் இருக்கிறேன்

மழை

நீ வரும்போது மட்டுமே மழை வருகிறது
நான் யாரை வரவேற்பது !
ஒவ்வொரு துளியிலும் உன்
வைரப் புன்னகை
ஜன்னலோர சாரல்களின் குறும்பு உன்
கைவிரலை மிஞ்சுகிறது
எதிர்பாராத நேரத்தில் பயமுறுத்த எப்போது
கற்றுகொடுத்தாய் இந்த இடி மின்னல்களுக்கு


வாசுகி


வாழ்க்கை

விரும்பியதெல்லாம் விட்டுகொடுத்தபிறகும்

வாழவே பிடித்திருக்கிறது மற்றவர்களுக்காக !!


எனது மொழி

கண்ணீரின் வார்த்தைகள் புரியுமனில்

ஊமையாக இருக்கவே விருப்பம்


மழை வாசனை

கவிதை பேசி திரிந்த காலங்களை நினைக்கையில்

விழியோரம் பெய்த மழையில் விசியது உன் வாசனை


வலிகள்

வார்த்தைகளால் வார்க்கிறேன்

வலிக்காது என்பதால்

உயிர் கொடுக்கிறேன்

சாதிக்கும் என்பதால்