Apr 18, 2010

எனது நாட்கள்

கவலையும்  கண்ணிரும்  மனதைப் பிசைக்க,

                நம்பிக்கையிழந்த சில நாட்கள்.

நாமும் முன்னேறுவோம் என்று , நம்பிக்கை

               துளிர்விட்ட சில நாட்கள்.

 

நமக்கு உதவுபவர்களை நினைத்து, அவர்கள் போல்

              வாழ ஏங்கிய சில நாட்கள்.

பிறர் செய்த தவறுக்கு, நாமே முன்வந்து

            மன்னிப்பு கேட்ட சில நாட்கள்.

 

இலட்சியத்தையும், நிகழ்காலத்தையும் நினைத்து,

           தூங்காமல் அழுத சில இரவுகள்.

வெற்றிகளுக்குப் பரிசாய் கண்ணிரும்,

தோல்விகளுக்குப் பரிசாய்  வைராக்கியமும்

           தந்த சில நாட்கள்.

 

சாதிக்க முயன்று சிறுகல் சறுக்கியதால், மனம்

          வெதும்பிய சில நாட்கள்.

நம்பிக்கையின்றி நடைபிணமாய்

            சில நாட்கள்.

 

விற்பனைக்கில்லை

உயிரற்ற பொருளை எல்லாம்

           உனதாக்கும் முயற்சியில்,

உயிருள்ள உறவுகளை வீதியிலே

           எறிவாயோ ??

 

காசிருந்தால் கிடைத்து விடும்

         என்று நினைப்பாயோ!!

நிம்மதி விற்பனைக்கு என்றுமில்லை

          பூமியிலே!!

     

சாமியாத்தா

 

உன் புருவங்கள் உயரும்போது வரும்

          முதல் வார்த்தை அய்யோ சாமியாத்தா!!

ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சொன்னாலும்,

           எதிரே சொல்வது போல் எப்போதும் ஒலிக்கிறது.

சின்னச் சின்ன வெற்றிகளையும் சிறு

             பிள்ளைபோல்  சொல்கிறேன்.

உன்னிடமிருந்து வரும் வார்த்தை

             அய்யோ சாமியாத்தா!!!!