கவலையும் கண்ணிரும் மனதைப் பிசைக்க,
நம்பிக்கையிழந்த சில நாட்கள்.
நாமும் முன்னேறுவோம் என்று , நம்பிக்கை
துளிர்விட்ட சில நாட்கள்.
நமக்கு உதவுபவர்களை நினைத்து, அவர்கள் போல்
வாழ ஏங்கிய சில நாட்கள்.
பிறர் செய்த தவறுக்கு, நாமே முன்வந்து
மன்னிப்பு கேட்ட சில நாட்கள்.
இலட்சியத்தையும், நிகழ்காலத்தையும் நினைத்து,
தூங்காமல் அழுத சில இரவுகள்.
வெற்றிகளுக்குப் பரிசாய் கண்ணிரும்,
தோல்விகளுக்குப் பரிசாய் வைராக்கியமும்
தந்த சில நாட்கள்.
சாதிக்க முயன்று சிறுகல் சறுக்கியதால், மனம்
வெதும்பிய சில நாட்கள்.
நம்பிக்கையின்றி நடைபிணமாய்
சில நாட்கள்.