Apr 11, 2010

பத்திரம்



ஊரெல்லாம் தேடினேன் உயர்ந்த பொருள் பரிசளிக்க,

பூக்கள் பரிசளிக்க விரும்பினென்,
       உன் மென்மையை எண்ணி,
ஆனால் அவை வாடும்போது,
       நீ வருந்துவதை நான் விரும்பவில்லை.

புத்தகம் பரிசளிக்க விரும்பினென், 
       உன் வார்த்தைகளை எண்ணி,
ஆனால் நீயோ வாழ்க்கையைப் படித்தவன்.


ஆடைகள் பரிசளிக்க விரும்பினென்,
       உன் ஆளுமையை எண்ணி,
ஆனால் நீயோ ஆடைச் சரணாலயத்தில் வசிப்பன்.

இறுதியில் , தோல்வியுடன் நடக்கையில்
        என் மனம் சொல்லிற்று.
நட்பைவிட உயர்ந்தது வேரொன்றுமில்லை என்று.

ஆதலால்

இதொ, உனக்கு ஒரு பத்திரம் என் கையொப்பமிட்டு,

நான் சாகும் வரை நீ என் நண்பன் என்று.


என் முதல் கவிதை.
      
               

No comments: