நமக்குள் இருக்கும் இடைவெளியை அதிகரிக்க,
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
சண்டை போடுகிறென்.
நீயோ ஒவ்வொரு முறையும்
இடைவெளியைக் குறைக்கிறாய்.
பார்க்கும் ஒவ்வொரு உருவத்திலும்
உன் முகங்கள்.
பாதையொரங்களில் சிதறிய பூக்களில்,
உன் புன்னகை.
வீதியில் உள்ள கடைகள் அனைத்திலும்
உன் பெயர் பொரித்த பெயர்ப்பலகைகள்.
பேருந்தில் ஏறும் போதெல்லாம், நீ ஏறிய
படிகள், அமர்ந்த இருக்கை.
இந்த உலகமே வேண்டாம் என வெறுத்து,
வீடு திரும்பினால், கண்ணாடியிலும்
கணித்திரையிலும் சிரிக்கிறாய்.
முகம் அழம்பி தேநீர் பருக எண்ணி,
குழாயினைத் திருப்பினால்
நீ கை கழுவும் சப்தம்.
வெறுத்து விட்டு, முகம் துடைக்க
துவாலை எடுக்கிறென்.
அதில் கூடவா உன் வாசனை.
தூக்கத்தை விரும்பி தலையணையில்
புதைகிறேன். தலையணை
முழுவதும் உன் மூச்சு.
இந்த் அவஸ்தை வேண்டாம் எனக்கு,
என்னைக் காப்பாற்று.
உன்னை மறக்க வழி சொல்.
No comments:
Post a Comment