Apr 6, 2010

அன்பு நண்(அன்)பருக்கு

உன் சொல்லெல்லாம் செயலாகும் , ஒரு

புன்னகையால் சொல்லிவிட்டால் .

அரளிப்பூ பறிக்க ஆயுதம் தேவையில்லை ,

அறிவில்லா ஆயுதம் ஆளையே கொன்றுவிடும்.

பிறர்மேல் கொள்ளும் வெறுப்பு

தன்னையே அழிக்குமல்லோ !

அகங்காரத்துடன் வாழ்தால்

அமைதி என்றுமில்லை.

தாழ்வு மனப்பான்மையால் மனம்

புழுங்க வேண்டா.

இங்கு ஒப்பிட எதுவுமில்லை.

நம் பிறப்பே அற்புதம் தான்.

தோல்வி எண்ணத்தால்

துவண்டு போகவேண்டா

உற்ற காலம் வரும்

உற்சாகத்துடன் செயலாற்று.

கொள்கையில் பிடிப்பு இருந்தால்

ஆற்றல் எல்லாம் நமக்குள்ளே !

மலையை நகர்த்துபவர்கள் சிறு

கல்லுக்கே கலங்கலாமா ?

எட்டாத மலை என்று எட்டி நிற்கலாமா ?

எட்டி வைத்தால் தொட்டு விடலாம்

எல்லா மலையையுமே .

ஊர் வாய் பேசும்மப்பா , உன்

செவிப்பறையை மூடிவிடு.

வட்டத்தை வகுத்து கொண்டு , வெளியே

வர மறுக்கிறாயே !

உள்ளே ஓர் தடை இருந்தால் , வெளி

வாய்ப்புக்கள் என்ன செய்யும் .

நமக்கு நாமே பகையாயின் , காளி தேவியே

வந்தாலும் காப்பாற்ற முடியாது.

மனதை உன் வசமாக்கு

உலகம் உன் காலடியில்.

சிந்தித்து பாரப்பா , சித்தம் தெளிந்துவிடும்

No comments: