இரு கரம் கூப்பி, எம் சிரம் தாழ்த்தி நன்றியுரைப்போம்
வருண பகவானே.
மண்ணின் ஈரம், மரங்களில் படர்ந்து, எம்
மனங்களை நிறைத்தது.
சில மரங்கள் மறித்த பின்பு தான்
உமக்கும் கருணை பிறந்தது.
ஆழ்துழாய் கிணற்றில், உயிர் வளர்த்த மரங்கள்
இன்று தாய்ப்பால் உண்ட பரவசத்தில்
தலை நிமிர்ந்து நிற்கிறது.
காலை வேளையில், கையில் பால் கலையத்துடன் வரும்
முகங்களில் எல்லாம் ஒரே புன்னகை.
வெள்ளாளணின் புன்னகைக்கு, வேறென்ன காரணம் இருக்கும்?
முன்னிரவில் பெய்த மழையைத் தவிர.
மக்களும், மாக்களும் மகிழ்ந்து உறவாடி, கால்நடை பெருக்கி,
எம் மண் செழித்து, எவ்வித்தாயினும் கங்கா பாண்டமாய்
காய்த்து தள்ள, கருணை புரிந்த கருணாமூர்த்திக்கு
நன்றியுரைப்போம்!
வருண பகவானே.
மண்ணின் ஈரம், மரங்களில் படர்ந்து, எம்
மனங்களை நிறைத்தது.
சில மரங்கள் மறித்த பின்பு தான்
உமக்கும் கருணை பிறந்தது.
ஆழ்துழாய் கிணற்றில், உயிர் வளர்த்த மரங்கள்
இன்று தாய்ப்பால் உண்ட பரவசத்தில்
தலை நிமிர்ந்து நிற்கிறது.
காலை வேளையில், கையில் பால் கலையத்துடன் வரும்
முகங்களில் எல்லாம் ஒரே புன்னகை.
வெள்ளாளணின் புன்னகைக்கு, வேறென்ன காரணம் இருக்கும்?
முன்னிரவில் பெய்த மழையைத் தவிர.
மக்களும், மாக்களும் மகிழ்ந்து உறவாடி, கால்நடை பெருக்கி,
எம் மண் செழித்து, எவ்வித்தாயினும் கங்கா பாண்டமாய்
காய்த்து தள்ள, கருணை புரிந்த கருணாமூர்த்திக்கு
நன்றியுரைப்போம்!
No comments:
Post a Comment